விமான நிலையத்தை சுற்றியுள்ள மோசமான வானிலை காரணமாக திருப்பி விடப்பட்ட பயணிகள் விமானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த பயணிகள் விமானம், விமான நிலையத்தை சுற்றியுள்ள மோசமான வானிலை காரணமாக இன்று மாலை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு (MRIA), மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை முகாமையாளர் தெரிவித்தார்.
மாலை 04.00 மணி முதல் பலத்த மழை மற்றும் மின்னலுடன் கூடிய மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்குவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது என்றார்.
அதன்படி, இந்தியாவின் சென்னையில் இருந்து மாலை 04.10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 8D 834 என்ற Fitz Air Service விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
மாலை 05 மணியளவில் MRIA இல் தரையிறங்கிய விமானத்தில் 143 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்ததாக MRIA கடமை மேலாளர் தெரிவித்துள்ளார் .



