ராணுவ உதவியுடன் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை

#world_news #Sudan #Flight
Mani
3 years ago
ராணுவ உதவியுடன் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை

சூடான் நாட்டில் இருந்து சவூதி அரேபியா போன்ற அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியதைத் தொடர்ந்து இந்திய விமானப் படை விமானங்களும் கடற்படை கப்பலும் இந்தியர்களை அழைத்து வர தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

சூடானில் இருந்து இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை வெளியேற்ற ராணுவம் ஒப்புதல்அளித்தது. இதனால் முதல் முதலாக 96 வெளிநாட்டவர்களை சவூதி அரேபியா மீட்டு தனது நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது.

அங்கிருந்து அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் ஜெட்டாவில் இரண்டு இந்திய விமானப்படை விமானங்களும் சூடான் துறைமுகம்அருகே இந்திய கடற்படைக் கப்பல் ஒன்றும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4