சீனாவில் கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலி

#China #Ship #fire #Death #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
சீனாவில் கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலி

சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.

அப்போது அங்குள்ள வெயிலாங் கப்பல் கட்டும் தளத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயந்துபோய் அவசர அவசரமாக வெளியே ஓடினர்.

மேலும் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

எனினும் இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!