ஜப்பான் கடல் அருகே வடகொரியா சமீபத்தில் நடத்திய ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளன.

#world_news
Mani
2 years ago
ஜப்பான் கடல் அருகே வடகொரியா சமீபத்தில் நடத்திய ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளன.

கொரிய தீபகற்ப பகுதிக்கு வடகொரியா ஏவுகணைகளை அனுப்பி அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் வடகொரியாவும் ஏவுகணையை ஏவியது. இதனால் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் பாதுகாப்புக்காக கூட்டு போர் பயிற்சியை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் நேற்று அதிகாலை ஜப்பானுக்கும் வடகொரியாவுக்கும் இடையே உள்ள கடலில் வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை அனுப்பியது. இதற்கு தென்கொரிய அதிபர் பாதுகாப்பு கவுன்சிலும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, "வடகொரியாவின் கடல்சார் நடவடிக்கைகளை ஜப்பான் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுவது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டவுள்ளது" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!