பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்! நீதி அமைச்சர்
#SriLanka
#Parliament
#Terrorist
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தச் சட்டமூலம் கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், பல தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவில்லை.
குத்த சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போதிய கால அவகாசம் இல்லாததால் சட்டமூலத்தை சமர்பிப்பதை தாமதப்படுத்துமாறு கோரப்பட்டது.