ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பரிதாப உயிரிழப்பு
#Switzerland
#Snow
#Blizzard
#Death
#world_news
#swissnews
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவாசிகள் குவிந்திருந்தனர். இந்நிலையில், ஆல்ப்ஸ் மலையில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் என பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.



