என்னை வாளால் வெட்டியவர்கள் மீது வானை ஏற்றியே கொலை செய்தேன் - சந்தேகநபர் பரபரப்பு வாக்குமூலம்!

#Police #Arrest #Death #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
என்னை வாளால் வெட்டியவர்கள் மீது வானை ஏற்றியே கொலை செய்தேன் - சந்தேகநபர் பரபரப்பு வாக்குமூலம்!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திரபுரம் பகுதியில் ஏ - 9 வீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

முகமாலையைச் சேர்ந்த திருபராஜ் ( வயது -28 ) என்பவரே விபத்தில் உயிரிழந்தார். இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபர் உடலில் வெட்டுக்காயங்களுடன் பளை நிலையத்தில் சரணடைந்தார்.

அவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், " விபத்துச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பதாக எனது வீட்டுக்கு மதுபோதையில் வந்த 3 பேர் என்னுடன் தகராறில் ஈடுபட்டு என்னை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். காயமடைந்த நான் எனது வாகனத்தைச் செலுத்தி மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தபோது ஏ - 9 வீதியில் என்னைத் தாக்கிய மூவரும் நின்றதை அவதானித்தேன்.

வாகனத்தை மறிக்க முற்பட்ட போது அவர்களை மோதித்தள்ளி விட்டு நிற்காது சென்றுவிட்டேன் " என சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார். சந்தேகநபர் வெட்டுக்காயங்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலி ஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!