முன்னாள் சபாநாயகரின் அஞ்சலி நிகழ்வு: பாராளுமன்றத்தில் தனிமையில் அமர்ந்திருந்த மஹிந்த ராஜபக்ச!
#SriLanka
#Sri Lanka President
#Mahinda Rajapaksa
#Ranil wickremesinghe
#Parliament
#Lanka4
Mayoorikka
2 years ago

மறைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் இன்று காலை பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர்கள் கரு ஜயசூரிய மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்ற வளாகத்திற்கு முன்னாள் சபாநாயகரின் பூதவுடல் தாங்கிய கலசத்துடன் வருகை தந்தனர்.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் தனிமையில் அமர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை அண்மைய நாட்களாக மஹிந்த ராஜபக்சவின் சகாக்கள் அவரிடமிருந்து விலகி வருகின்றதாகவும் அறிய முடிகின்றது.
இந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு அஞ்சலி நிகழ்வு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வேளையில் அவர் தனிமையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.











