ராகுல் காந்திக்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

#world_news #Rahul_Gandhi #America #India
Mani
3 years ago
ராகுல் காந்திக்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “ஒவ்வொரு திருடனின் பெயரும் மோடியுடன் முடிவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, மோடி சமூகத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி, ராகுல் காந்திக்கு எதிராக குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், கடந்த 24-ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனிடையே, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ராகுலின் எம்பி அந்தஸ்துக்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேலிடம், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி எம்.பி., குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்தை மதிப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அடிப்படையானது என்று அவர் பதிலளித்தார். இந்திய நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீதான விளக்கத்தை நாங்கள் பார்த்து வருகிறோம்.

“கருத்து சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4