அமெரிக்காவில் ஊதிய உயர்வு கோரி கல்வித்துறை ஊழியர்கள் பேரணி
#America
#education
#Employees
#strike
#Salary
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

அமெரிக்க நாட்டில் கல்வித்துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கும் மேல் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை திடீரென தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இதனால் வகுப்பறை உதவியாளர்கள், பள்ளி பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை ஊழியர்கள் அனைவரும் மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேரணியாக சென்றுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பள்ளி ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 4,20,000 மாணவர்களின் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.



