ஆளுநர்களை சந்தித்த பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளூர் ஆட்சி மன்றங்கள் தொடர்பில் ஆராய்வு
#Dinesh Gunawardena
#government
#Governor
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

ஆளுநர்களை சந்தித்த பிரதமர் தினேஷ் குணவர்தன.. உள்ளூர் ஆட்சி மன்றங்கள் தொடர்பில் ஆராய்வு
340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் அந்த நிறுவனங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது
ஆளுநர்களான டிக்கிரி கொப்பேகடுவ (சப்ரகமுவ), வசந்த கர்ணகொட (வடமேற்கு), எம்.ஜே.எம்.முசம்மில் (ஊவா), மஹீபால ஹேரத் (வடமத்திய), வில்லி கமகே (தெற்கு), லலித் யூ. கமகே (மத்திய), அனுராதா யஹம்பத் (கிழக்கு), ரொஷான் குணதிலக்க. மேற்கு), ஜீவன் தியாகராஜா (வடக்கு), ஆகியோர் கலந்து கொண்டனர்.



