ஆசிரியர் இடமாறுதல் வாரியத்தை கலைப்பது குறித்து ஆலோசனை
#SriLanka
#sri lanka tamil news
#Sri Lanka Teachers
#Lanka4
#srilankan politics
#Tamil People
#Tamil Student
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
ஆசிரியர் இடமாற்றச் சபையை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை பங்குனி மாதம் 20 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வந்த ஆசிரியர் இடமாற்றச் சபை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அரசாங்கம் அறிவித்திருந்தது.
இருப்பினும் , பல தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.