340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

#SriLanka #sri lanka tamil news #government #Lanka4 #municipal council #urban council #Local council
Prathees
2 years ago
340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இதன்படி, மாநகர சபைகளின் அதிகாரம் ஆளுநர்களின் கீழ் உள்ள மாநகர ஆணையாளர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கும் மாற்றப்படுகிறது.

எவ்வாறாயினும் கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் அதிகார பரிமாற்றம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் விளக்கம் கோர வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத சேவைகளை வழங்கும் வகையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவிக்காலம் முடிவடையும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தங்களிடம் உள்ள அரச வாகனங்களை ஒப்படைக்குமாறு நேற்று அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

சரணடையாத உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!