தமிழகத்தில் காவல்துறையினரை உடைத்த பீர் போத்தலால் தாக்கிய இலங்கை ஏதிலி ஒருவர் கைது
#India
#Police
#TamilNadu Police
#Arrest
#Lanka4
Kanimoli
2 years ago

தமிழகம்- திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறையினரை உடைத்த பீர் போத்தலால் தாக்கிய இலங்கை ஏதிலி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை முகாமைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பில் குறித்த ஏதிலி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட வேளையிலேயே அவர் காவல்துறையினரை தாக்கியுள்ளார்.இதன்போது காவல்துறை அலுவலர் ஒருவர் மயங்கி வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



