புலம்பெயர் உறவுகளின் நிதி அனுசரணையில் உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பால் நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்வு
#Jaffna
#BLOOD
#Hospital
#Tamil People
#people
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பு 9வது ஆண்டாக புலம்பெயர் உறவுகளின் நிதி அனுசரணையில் நடாத்தும் உயிர் காக்கும் உன்னதமான சேவையான குருதிக் கொடை நிகழ்வு இன்று 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் பகல் 01.30 மணி வரை உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.
இதில் இளைஞர், யுவதிகள் என 27 குருதிக் கொடையாளிகள் கலந்து இரத்த தானம் வழங்கி வைத்தார்கள் பங்கு பற்றிய அனைவருக்கும் பயனுள்ள மரக்கன்று மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது






