ரணில் ஹிட்லரின் மறு அவதாரம்: டலஸ் அழகப்பெரும சாடல்
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Dallas Alagaperuma
#Election
#Election Commission
#Lanka4
Mayoorikka
2 years ago

அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை வாயை மூடி உட்காருங்கள் என கட்டளையிட்ட ஜனாதிபதி, விரைவில் பொது ஒழுங்கு மூலம் வாயடைக்க நேரிடும் என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
வரலாற்றில் மிகக் கொடூரமான சர்வாதிகாரியான ஹிட்லரின் மறு அவதாரம் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஜனாதிபதி கடும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தவிர்ப்பதற்கான அவரது முயற்சிகள் தெளிவாக இருப்பதாகவும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
அவர் விரைவில் நாட்டு மக்களால் மௌனிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.
கம்புருபிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அழஹப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.



