நிதி அமைச்சின் செயலாளருக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து இடைக்கால உத்தரவு

#Court Order #Election #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Finance #Tamilnews #Ranjith Bandara
Prathees
2 years ago
நிதி அமைச்சின் செயலாளருக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து இடைக்கால உத்தரவு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இதுதவிர, வாக்குச் சீட்டு அச்சடிக்க அரசு அச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தைச் செலவிடுவதைத் தடுக்கும் மற்றொரு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள நிதியமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சார்பில் குறிப்பிடப்பட்டிருந்த சட்டமா அதிபர் ஆகியோருக்கு இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு அனுமதியளித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!