திறைசேரியின் செயலாளருக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து இடைக்கால உத்தரவு!

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரி தடுத்துவைக்க முடியாது என திறைசேரியின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதியை வழங்காததன் மூலம் திறைசேரியின் செயலாளர் உட்பட்டவர்கள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என ரஞ்சித்மத்தும பண்டார தனது மனுவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, வாக்குச் சீட்டு அச்சடிக்க அரசு அச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தைச் செலவிடுவதைத் தடுக்கும் மற்றொரு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள நிதியமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சார்பில் குறிப்பிடப்பட்டிருந்த சட்டமா அதிபர் ஆகியோருக்கு இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, முக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் .ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு அனுமதியளித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .
அதன்பிறகு, மனு தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் ஆட்சேபனைகளை உச்ச நீதிமன்ற விதிகளின்படி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட அமர்வு, மனு மீதான விசாரணை மே 26ம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டது.



