முன்னோக்கி செல்வதற்கான தடைகள் குறித்து ஜனாதிபதி மகா சிவராத்திரி அறிக்கையில் விளக்கம்!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Festival
#Lanka4
#Sri Lanka Teachers
Mayoorikka
2 years ago

பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை இல்லாமல் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இவாறு தெரிவித்தார்.
மேலும் உறவுகளை வலுப்படுத்த தீர்மானித்தால், நாடு எதிர்நோக்கும் அனைத்து சவால்களையும் முறியடித்து சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சுபீட்சம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்ப நிச்சயம் முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் என்பனவற்றுக்கு இடையில் காலதாமதமின்றி அபிவிருத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.



