இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளது -சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

Kanimoli
2 years ago
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளது -சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை 21 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 47 ஆயிரத்து 293 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர் எனவும், செப்டெம்பர் மாதத்தில் 29 ஆயிரத்து 802 பயணிகளே வருகை தந்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே மிகவும் குறைந்தளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

அதேவேளையில் தற்போது இலங்கையில் அந்நியச்செலாவணி குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!