வெடிப்பு சம்பவங்களை ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்!
#Gotabaya Rajapaksa
Mayoorikka
3 years ago

நாட்டில் ஏற்படும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக பேராசிரியர் சாந்த வல்பொலகே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளுடன் கூடிய அறிக்கையை விரைவில் கையளிக்குமாறு ஜனாதிபதி குறித்த குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.



