பிற்பகலுக்கு மேல் மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

#SriLanka #weather #Rain #Warning #Meteorology
Thamilini
1 hour ago
பிற்பகலுக்கு மேல் மழைக்கு வாய்ப்பு -  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 அத்துடன், பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

 இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4