இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விஜயம்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றைய தினம், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பயணம் செய்துள்ளார்.
இதன்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தங்கள் வலுவான பாதுகாப்புப் பங்களிப்பையும் நெருங்கிய ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தின.
இந்த வருகையானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், வரும் ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அவற்றுக்குள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டியது.
அத்துடன் ராஜ்நாத் சிங்கிற்கு அணிவகுப்பு மரியாதை (Guard of Honour) அளிக்கப்பட்டதுடன், இலங்கையின் பாதுகாப்புத் துறைக்கான பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர (ஓய்வுபெற்ற) அவரை அன்புடன் வரவேற்றார்.
கூட்டத்தில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஜெயசேகர, பல்வேறு துறைகளில் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் நீண்டகால ஆதரவை வலியுறுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு அடிப்படையாக விளங்கும் வலுவான பாதுகாப்புத் தொடர்புகள் மற்றும் நெருங்கிய ஒத்துழைப்பு ஆகியவற்றையும் சுட்டிக்காட்டினார்.
அவசரநிலைகள் மற்றும் சவாலான சூழல்களின்போது இந்தியா இலங்கைக்கு அளித்து வரும் தொடர்ச்சியான உதவிகளுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.மேலும், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் மீள்திறனுக்கு இந்தியாவின் ஆதரவு எவ்வளவு முக்கியமானது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை இந்நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நெருங்கிய மற்றும் நீண்டகால உறவை மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் வலுவான பிணைப்புகள் வரும் ஆண்டுகளில் மேலும் வலுவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே