நீர் தேடி ஊருக்குள் வரும் யானைகள் - மக்களின் கவனத்திற்கு
#SriLanka
#Elephant
#Warning
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மனித-யானை மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது.
கடந்த மாதம் 21ஆம் திகதி வரை பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு மனித-யானை மோதல்களால் 207 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், 88 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மராசிங்க தெரிவித்தார்.
தற்போதைய வறண்ட வானிலையால் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால், மக்கள் இதுகுறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே