உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய கோரிக்கை: பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
#India
#Tamil Nadu
#Arrest
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலினை காவல்துறை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே