ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சென்ற 100க்கும் மேற்பட்டோரை மீட்ட பிரெஞ்சு கடலோரக் காவல்படை
#France
#Hospital
#Lanka4
#England
#Boat
#Rescue
Prasu
1 month ago
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஒரே படகில் 106 புலம்பெயர்வோர் பயணித்துக்கொண்டிருந்தநிலையில், அந்த படகு பழுதாகியுள்ளது.
ஆங்கிலக்கால்வாயில் புலம்பெயர்வோர் படகொன்று பழுதாகி நிற்பதாக பிரான்ஸ் கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், பழுதாகி நின்றுகொண்டிருந்த அந்த படகில் 106 புலம்பெயர்வோர் இருந்தது தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒரு பெண் உட்பட ஏழு பேர் தண்ணீரில் விழுந்த நிலையில், அவர்களை மீட்ட பிரான்ஸ் கடற்படையினர், அந்தப் பெண் சுயநினைவிழந்ததால் அவரை ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே