இரத்தினக்கல் ஏற்றுமதி எதிர்பார்த்த அளவு வளர்ச்சியடையவில்லை - ஹரிணி அமரசூரிய!

இலங்கை ஏற்கனவே இரத்தினக்கல் மற்றும் நகைகளுக்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலும், ஏற்றுமதிகள் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லை என்றும், சர்வதேச இரத்தினக்கல் மற்றும் நகை சந்தையை கைப்பற்றுவதற்கு நிலையான கொள்கைகளை நிறுவ அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025 ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெல்மதுள்ளையில் உள்ள கிராண்ட் சில்வேரே ஹோட்டலில் நடைபெறும் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் நகை கண்காட்சியான ஜெம் சிட்டி ரத்னபுர - 2025 இன் திறப்பு விழாவில் உரையாற்றும் போது பிரதமர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சீரற்ற கொள்கைகள் இந்தத் துறையின் வளர்ச்சியைத் தடுத்துள்ளன. தொழில்துறையின் லட்சிய ஏற்றுமதி வருவாய் இலக்குகளை அடைய தேவையான நிலையான கொள்கைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



