முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
#SriLanka
#Arrest
#Court Order
#warrant
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 weeks ago

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) நடத்திய விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது.
லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்த உண்மைகளை கருத்தில் கொண்டு கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் அளிக்குமாறு கோரப்பட்ட போதிலும் அவர் வாக்குமூலம் அளிக்கத் தவறிவிட்டதாகவும், அதன் மூலம் நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



