இராணுவ முகாமிற்குள் சென்ற நால்வர்: மூவர் திரும்பினர்! ஒருவர் சடலமாக மீட்பு
#SriLanka
#Mullaitivu
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
1 year ago
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இடது கரை கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் இரண்டு நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டபோது, அப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் சென்றுள்ளனர்.
அந்த இடத்தில் இருந்த ஒரு சிப்பாய் நான்கு கிராமத்து இளைஞர்களை உலோகக் கழிவுகளை(தகரம் ) சேகரிக்க அழைத்ததாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
சிறிது நேரத்திலேயே, மற்ற சிப்பாய்கள் அந்தக் குழுவைத் தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர் .
தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடிவிட்டனர், மூன்று பேர் நேற்று வீடு திரும்பினர்.
காணாமல் போன நான்காவது நபர் இன்று காலை முத்தையன்கட்டு குளத்தில் இறந்து கிடப்பதாக பாதிக்கபட்ட குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
