கடும் காற்றினால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி!
#SriLanka
#Death
#NuwaraEliya
#Wind
Soruban
4 months ago
கடும் காற்றினால் மரக் கிளை முறிந்து வீழ்ந்ததால் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் மற்ற உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இடம் பெற்று உள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய ராசமாணிக்கம் செல்வகுமார் என்பவரே இவ்வாறு உயரிழந்துள்ளார். குறித்த வியடம் தொடர்பில் மேலும் தெரியவருவது குறித்த நபர் விறகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த போது கருப்பன்தைல மரக் கிளை முறிந்து வீழ்ந்தால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
