ஸ்ரீ தலதா மாளிகை:எசல பெரஹரா ஆரம்பம்
#SriLanka
#Festival
#kandy
Soruban
4 months ago
கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா இம்மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, இந்த ஆண்டு பெரஹரா இம்மாதம் 25 ஆம் திகதி கப் நட்டல் நிகழ்வுடன் ஆரம்பமாக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கும்பல் பெரஹரா மற்றும் ரந்தோலி பெரஹரா இம்மாதம் 30 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு வீதிகளில் ஊர்வலமாக வலம் வர உள்ளன.
இதற்கிடையில், பெரஹெராவிற்கு போதுமான யானைகள் இல்லாதது பிரச்சினையாக மாறியுள்ளது என தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
