தமிழ் மக்களை கொள்ளையடிக்கிறதா சுவிஸ் அரசு? (வீடியோ இணைப்பு)

சுவிஸில் ஊதியம் தொடர்பான தகவல் இது. சுவிஸில் பதிந்து உத்தியோகபூர்வமாக வேலை செய்பவர்கள் ஊதியம் கொடுக்கப்படுகின்ற பொழுது பல கழிவுகள் கழிக்கப்படுகின்றன.
அதாவது விபத்து ஏற்பட்ட ஆட்களுக்கான நஷ்ட ஈடு ஓய்வூதிய தொகை இரண்டாவதுஓய்வூதிய தொகை மற்றும் வேலை இல்லாமல் போனால் இரண்டு வருடங்களுக்கு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கான காப்பீடு இப்படி ஒரு குறிப்பிட்ட தொகைகள் கழிக்கப்படுகிறது.
சிலருக்கு வீட்டு வாடகை கழிப்பார்கள் சிலருக்கு மருத்துவ காப்பீடு முதலிலே கழிப்பார்கள் இப்படி அவர்கள் ஒரு சம்பளத்தை எடுத்து அதற்கு கழித்து வருகின்ற பொழுது பணம் சிறியதாகத்தான் இருக்கும் காரணம் பெரிய தொகை அனைத்தும் கழிக்கப்படுகிறது.
ஆனால் அவர்கள் அது கழிக்கப்படுவதனால் இவ்வளவு பல ஆராயிரம் சம்பளம் எடுக்கின்றேன். எனக்கு 4000 தான் கிடைக்கின்றது மீதியை அரசாங்கம் கொள்ளையடித்து விடுகின்றது என்று ஒரு சிலர் பேசுவதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் இது முற்றுலும் தவறான தகவல் அதாவது ஓய்வூதிய பணம் என்பது இவர்களிடத்திலிருந்து 200 சுவிஸ் பிராங்குகள் கழிக்கப்பட்டால் அத்தோடு தன்னுடைய நிறுவனத்திலிருந்து 200 பிராங்குகள் இணைத்து 400 பிராங்குகள் செலுத்தப்படும் இவர்களுக்கு ஓய்வூதிய கணக்கில் ஒரு நிறுவனத்திற்கு செலுத்தப்படும்.
அந்த நிறுவனம் 65 வயது ஆண்களாக இருந்தால் பெண்கள் 63 வயதிலே அவர்களுக்கு 400 உடன் சிறிய வட்டியும் சேர்த்து இவர்களுக்கு மாதாந்தம் கொடுக்கப்படும் அல்லது இவர்கள் முன்கூட்டிய காரணத்தை காட்டி எடுத்துக் கொள்ளலாம்...
இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய கீழுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்



