மழை மற்றும் மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#weather
#Rain
Thamilini
1 year ago
மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையினால் ஏற்படும் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.