15 வருடங்களில் முதல் முறையாக தொழிற்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம்!
#SriLanka
#budget
Thamilini
11 months ago

பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் நேற்று (30.10) தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.
பிரித்தானிய அரசாங்கம் 30 வருடங்களில் அறிமுகப்படுத்திய மிகப்பெரிய வரி அதிகரிப்பை இந்த வரவு செலவு திட்டம் மூலம் முன்மொழிந்துள்ளது. இதன்படி 40 பில்லியனை திரட்டுவதற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனது வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்ததில், ரீவ்ஸ் முந்தைய பழமைவாத நிர்வாகத்தை குற்றம் சாட்டினார்.
பொதுப்பணித்துறை சீர்குலைந்ததாக குற்றம் சாட்டினார்.
அதன்படி, ஆண்டுக்கு 40 பில்லியன் பவுண்டுகள் வரி அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.



