நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், மக்கள் ஒன்றுக்கூடவும் முற்றாக தடை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் பொலிஸார் மக்களை கேட்டுக்கொள்கிறது.
இதேவேளை, யாரையும் துன்புறுத்தாமல் தமது மகிழ்ச்சி வெளிப்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் குழுவாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி பதிவியேற்றுள்ள நிலையில் அரசியலிலும், அரசியல் பதவிகளும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையிலே அமைதியாக செயற்படுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.