ஒன்றரை வயது சிசுவை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தாய் மற்றும் ஆண் ஒருவர் கைது
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட தாய் மற்றும் தந்தை எனக் கூறப்படும் ஆண் ஒருவரும் அப்பகுதி மக்களால் படிக்கப்பட்டு தருமபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மேலும் தெரிய வருவது யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அதில் ஒரு குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் விற்பனை செய்வதாகவும் கூறி உள்ளனர்.
தற்பொழுது விற்பனை செய்யப்பட்ட குழந்தை இவர்களுடையதா அல்லது வேறு யாருடைய குழந்தையா என மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக குழந்தையை விற்பனை செய்த தாய் மற்றும் விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த ஆண் ஒருவரும் மற்றும் குழந்தையை பணம் கொடுத்து பெற்றவர் உட்பட மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை தற்பொழுது பொலிசாரின் பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
(வீடியோ இங்கே )