ரணில் எடுத்த அதிரடி தீர்மானம்
#SriLanka
#Ranil wickremesinghe
Mayoorikka
10 months ago

பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீண்டும் தேசிய பட்டியில் ஊடாக பாராளுமன்றத்துக்கு வரமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக அவர் தொடர்ந்து செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்தை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகியோர் உறுதிப்படுத்தினர்.



