தேர்தலின் முதல் முடிவு நள்ளிரவில் வெளியாகும்!
#SriLanka
#sri lanka tamil news
Dhushanthini K
10 months ago

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தபால் மூலமான வாக்குகளாகவோ அல்லது பதிவான வாக்குகளின் மூலமாகவோ முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அதிகாரிகளின் திறமையைப் பொறுத்தே அமையும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இன்று நள்ளிரவில் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.



