ஜனநாயக கடமையை சரிவர நிறைவேற்றுவோம்!
#SriLanka
#Election
Mayoorikka
1 year ago
“நாட்டில் நாளை (21) காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை ஜனாதிபதி தேர்தலுக்குரிய வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
எனவே, வாக்காளர்கள் அனைவரும் தமது வாக்குரிமையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். தயவுசெய்து வாக்களிக்காமல் இருந்துவிட வேண்டாம்.” என Lanka4 ஊடகம் வாக்காளர்களை வேண்டிநிற்கிறது.
வாக்களித்த பிறகு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் பிரகாரம் செயற்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
ஜனாதிபதி தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் வெற்றிகளை அமைதியாகவும் பண்பாடாகவும் கொண்டாடுமாறும் வினயமாக Lanka4 ஊடகம் உங்களைஅழைத்து நிற்கிறது