வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு!
#SriLanka
#Election
#Vote
Mayoorikka
1 year ago
இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று (18) முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 14ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், சுமார் 97 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.