அமைச்சரவையின் சில தீர்மானங்கள் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் அதிருப்தி!
#SriLanka
#Election
#Election Commission
Mayoorikka
1 year ago
அமைச்சரவையின் சில தீர்மானங்கள் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார். எனினும் இதனை தடுப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் அமைச்சரவை சமீபத்தில் ஏற்றுக்கொண்டுள்ள தீர்மானங்கள் குறித்த எங்கள் கவலைகளை தெரிவித்துள்ளோம்,என தெரிவித்துள்ள அவர் செப்டம்பர் முதல் ஓய்வூதியம் பெறுபவர்களிற்கு 3000 ரூபாய் விசேட மாதாந்த தொகையாக வழங்கும் அமைச்சரவையின் முடிவு குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை ஒக்டோபருக்கு பின்னர் நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.