கஜமுத்து வைத்திருந்த பல சந்தேக நபர்கள் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கஜமுத்து வைத்திருந்த பல சந்தேக நபர்கள் கைது!

இரண்டு பகுதிகளில் கஜமுத்து வைத்திருந்த பல சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். 

பூநகர் பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 02 துப்பாக்கிகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை ஈச்சலம்பத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 சந்தேகநபர்கள் கொகரெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சலம்பத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை, புத்தளம் பிரதேசத்தின் குளக்கரை பகுதியில் 03 கஜமுத்துக்களை விற்பனை செய்ய தயாராக இருந்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்ய முடிந்தது.  

03 கோடி ரூபாவிற்கு இந்த நகைகள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக விமானப்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.  

இதன்போது  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் மாவனெல்ல பிரதேசத்தில் வசிப்பவர்கள் மற்றும் மற்றைய நபர் புத்தளம் பகுதியை சேர்ந்தவர். 

சந்தேகநபர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்க பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!