தாயின் கருப்பையில் இருந்த 15 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றிய வைத்தியர்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வீரகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயின் கருப்பையில் இருந்த 15 கிலோ கட்டி நேற்று (03) வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் டாக்டர் சமந்த சமரவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இதனை மேற்கொண்டனர்.
சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட தாய் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



