இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (20.06) காலை நாட்டை வந்தடைந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இவ் விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான விஜயமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை