18 வயது பூர்த்தியானவர்களுக்கே சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
18 வயது பூர்த்தியானவர்களுக்கே சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும்!

சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு 17 வயது பூர்த்தியான எவரும் சாரதி விண்ணப்பத்தைப் பெறுவதற்கு பயிற்சி பெறலாம், ஆனால் உரிமம் வழங்க 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இது தொடர்பான சட்டத்தை அறியாமல் பலர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டப்படுவதாகவும், வயது பூர்த்தியாகும் வரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை எனவும் ஆணையாளர் நாயகம் நிஷாத்ன வீரசிங்க தெரிவித்துள்ளார்.  

அதேநேரம், ஓட்டுநர் உரிமத்தில் பயிற்சியாளரின் பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.  

அதேவேளை, வாகன விபத்துக்களை குறைப்பதற்கு இந்த புதிய முறைமை பயன்படுத்தப்படும் எனவும், இதன்மூலம் பயிற்றுவிப்பாளரை பார்த்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!