போராட்டம் தொடரும்: பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அறிவிப்பு
#SriLanka
#Protest
#University
Mayoorikka
1 year ago
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்கவிற்கும் இடையில் நேற்றையதினம்(18) இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவடைந்ததாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக்க எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்.
எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பை தொடர முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.