போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்காவில் இருவர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கனடா செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்கிய யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இருவர் நீர்கொழும்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



