அவுஸ்ரேலியாவில் 16 வயது இளைஞர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மேற்கு ஆஸ்திரேலிய பொலிசார் பெர்த்தில் பொதுமக்களை காயப்படுத்திய 16 வயது இளைஞரை சுட்டுக் கொன்றதாக அறிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் வன்முறை நடவடிக்கையில் ஈடுபடபோவதாக காவல் துறைக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில், குறித்த இளைஞர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அதிகாரிகள், ஆன்லைனில் அவர் தீவிரமயமாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் உயிரிழந்த இளைஞரின் பெயர் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.



