கொலம்பியா பல்கலைக்கழகத்தை திடீரென முற்றுகையிட்ட பொலிஸார்! அதிரடியாக பலர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கொலம்பியா பல்கலைக் கழகத்தை திடீரென சோதனையிட்ட பொலிஸார் அங்கு கட்டடம் ஒன்றில் தங்கியிருந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டகாரர்களை கைது செய்துள்ளனர்.
மன்ஹாட்டன் பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் மண்டபத்தில் இருந்து சுமார் 30 முதல் 40 பேர் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் ஐவி லீக் பள்ளியில் நடந்த ஆர்ப்பாட்டம் "முடிய வேண்டும்" என்று கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடந்தது.
கொலம்பியாவின் வளாகத்தில் உள்ள ஹாமில்டன் மண்டபத்தின் நுழைவாயிலை மாணவர்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.



