பாகிஸ்தானில் நிலவும் மோசமான வானிலை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#Pakistan
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பாகிஸ்தானில் நிலவும் மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக மேலும் 82 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2,715 வீடுகள் பகுதியளவில் அல்லது முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், தற்போதைய கடும் மழை இன்னும் சில நாட்களுக்கு எதிர்பார்க்கப்படலாம் என வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே